Skygain News

ராபின் உத்தப்பா ஓய்வு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இந்திய அணியின் முன்னாள் வீரரும், நடப்பாண்டில் CSK அணிக்காக ஆடிய ராபின் உத்தப்பா தனது ஓய்வை அறிவித்தார். 2007ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்று, சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

அடுத்து இவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இதனால், அடுத்து இந்திய அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்ட அவர், 2015ஆம் ஆண்டுவரை மொத்தம் 46 ஒருநாள் போட்டிகள், 13 டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். இதைத்தொடர்ந்து ஐ.பி.எல் லில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வந்தார்.

2014ஆம் ஆண்டில் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும், அடுத்து 2021ஆம் ஆண்டில் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம்பெற்றிருந்தார். கடந்த சீசனில் முதல் சில போட்டிகளில் அதிரடி காட்டிய இவர், அதன்பிறகு சிறப்பாக சோபிக்கவில்லை.

இருப்பினும், உத்தப்பாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்றுதான் கருதப்பட்டது. இவருக்கு தற்போது 36 வயதாகிறது.இந்நிலையில் ஐபிஎல் உட்பட இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக ராபின் உத்தப்பா தற்போது அறிவித்துள்ளார். இதனையடுத்து கடந்தாண்டு CSK அணிக்காக தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராபின் உத்தப்பா திடீரென ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More