இந்திய அணி ஆசிய கோப்பையில் சொதப்பினாலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை வென்று ரசிகர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. மேலும் இந்திய அணியின் தேர்வு குழப்பங்கள் தீர்ந்தாலும் இன்னும் ஒரே ஒரு கேள்வி தான் நீடித்து வருகின்றது.
அது என்னவென்றால் இந்திய அணியின் கீப்பராக தினேஷ் கார்த்திக் ஆடுவாரா இல்லை ரிஷ்ப் பண்ட் ஆடுவாரா என்பது தான். ஆஸ்திரேலிய தொடரில் தினேஷ் கார்த்திக் மீது முழு நம்பிக்கை வைத்த ரோகித் சர்மா, ரிஷப் பண்ட்-ஐ வெளியில் உட்கார வைத்தார். எனினும் தினேஷுக்கு பெரியளவில் பேட்டிங் வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் தென்னாப்பிரிக்க தொடரில் என்ன செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில் இதுகுறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார். அதில், என்னைப்பொறுத்தவரை டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக தினேஷ் கார்த்திக் – பண்ட் இருவருமே நிறைய போட்டிகளில் ஆடி தயாராக வேண்டும். குறிப்பாக தினேஷ் கார்த்திக் தயாராக போட்டிகள் தேவை.
ஏனென்றால் அவருக்கு ஒரு சில பந்துகளே ஆடுவதற்கு கிடைக்கிறது.தென்னாப்பிரிக்க தொடரில் என்ன செய்யப்போகிறோம் என தெரியவில்லை. தென்னாப்ப்ரிக்காவின் பவுலிங் லைன் அப்பை பார்ப்போம். அவர்களின் பவுலிங்கை பொறுத்து தான் பேட்டிங் வரிசையை முடிவு செய்வோம்.
அவர்கள் இருவரின் விஷயங்களில் மிகவும் யோசித்து தான் முடிவெடுக்கிறோம். இனி வரும் போட்டிகளிலும் சூழலை பொறுத்தே தேர்வு அமையும் எனக் கூறியுள்ளார். இதன் காரணமாக அணியில் தினேஷ் கார்த்திக் ஆடுவாரா இல்லை பந்த் ஆடுவாரா என்ற குழப்பம் நீடித்து வருகின்றது.