Skygain News

அதெல்லாம் ஈஸி இல்ல..வெளிப்படையாக பேசிய ரோஹித் சர்மா..!

T20 உலகக்கோப்பையை பற்றி சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.அவர் பேசியதாவது , நாங்கள் உலகக் கோப்பை தொடரை வென்று சிறிது காலம் ஆகிவிட்டது. உலகக் கோப்பையை வெல்வதே எங்களது நோக்கம். எங்களது சிந்தனையும், செயல் முறையும் அதை நோக்கியே உள்ளது.

எனினும் பல விஷயங்களைச் சரியாகச் செய்தால்தான் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்பதை அறிந்துள்ளோம். எனவே ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறோம்.

எங்களால் வெகுதூரம் முன்னோக்கி சிந்திக்க முடியாது.

இப்போதே அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி குறித்து நினைத்துக் கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு ஆட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நம்மால் முடிந்ததை சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் எதிராக நன்றாகத் தயாராகி, சரியான திசையில் நகர்வதை உறுதிப்படுத்திக் கொள்வதும் முக்கியம் என அவர் கூறியுள்ளார்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More