Skygain News

மைதானத்திற்கு உள்ளே வந்த சிறுவன்..ரோஹித் ஷர்மாவின் செயல்..பாராட்டும் ரசிகர்கள்..!

இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் T20 உலகக்கோப்பையில் விளையாடி வருகின்றது.தற்போது ஜிம்மபவே அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.இந்நிலையில் நேற்று ஜிம்பாபவே அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்திற்குள் ஒரு சிறுவன் ஓடி வந்தது தான் தற்போது ஹைலைட்டான விஷயமாக இருக்கின்றது.

பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த ஒரு சிறுவன், இந்திய தேசிய கொடியை ஏந்தியவாறு, உணர்ச்சி வசப்பட்டு, மைதானத்திற்குள் பாதுகாப்பை மீறி ஓடி வந்தார். அந்த சிறுவனுக்கு ஒரு 8 முதல் 10 வயது தான் இருந்திருக்கும்.

ஆனால், மைதானத்தில் இருந்த பாதுகாவலர்கள். அந்த சிறுவனை ஓடி பிடித்து அடிக்க முயன்றதோடு, அவனை தரதரவென்று இழுத்து செல்ல முயன்றனர். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரோகித் சர்மாவும், முகமது ஷமியும் ஓடி வந்து பாதுகாவலரை அந்த சிறுவனை விட்டு விடும் படி கூறினர்.

மேலும் சிறுவனை அடிக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பாக அழைத்து செல்லுங்கள் என்றும் ரோகித் கூறினார்.இதுதான் தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகின்றது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More