இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் T20 உலகக்கோப்பையில் விளையாடி வருகின்றது.தற்போது ஜிம்மபவே அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.இந்நிலையில் நேற்று ஜிம்பாபவே அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்திற்குள் ஒரு சிறுவன் ஓடி வந்தது தான் தற்போது ஹைலைட்டான விஷயமாக இருக்கின்றது.
பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த ஒரு சிறுவன், இந்திய தேசிய கொடியை ஏந்தியவாறு, உணர்ச்சி வசப்பட்டு, மைதானத்திற்குள் பாதுகாப்பை மீறி ஓடி வந்தார். அந்த சிறுவனுக்கு ஒரு 8 முதல் 10 வயது தான் இருந்திருக்கும்.
ஆனால், மைதானத்தில் இருந்த பாதுகாவலர்கள். அந்த சிறுவனை ஓடி பிடித்து அடிக்க முயன்றதோடு, அவனை தரதரவென்று இழுத்து செல்ல முயன்றனர். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரோகித் சர்மாவும், முகமது ஷமியும் ஓடி வந்து பாதுகாவலரை அந்த சிறுவனை விட்டு விடும் படி கூறினர்.
மேலும் சிறுவனை அடிக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பாக அழைத்து செல்லுங்கள் என்றும் ரோகித் கூறினார்.இதுதான் தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகின்றது