Skygain News

கள்ளக்குறிச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு…

கள்ளக்குறிச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் 1000 த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி , கடலூர் , பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் உள்ள விஏஎஸ்‌ திருமண மஹால் முன்பு துவங்கிய ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை அந்த அமைப்பின் மாநில மக்கள் தொடர்பு பிரிவு செயலாளர் கல்யாண் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி சேலம் சாலை , சித்தேரிதெரு , கவரை தெரு , மற்றும் காந்தி சாலை என முக்கிய வீதிகளின் வழியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சி மந்தைவெளியை வந்தடைந்தனர். இந்த ஊர்வலத்தில் 1000 பேர் கலந்து கொண்டனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் தலைமையில் 1300-க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More