நடிகை சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சினை காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால்,அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளை இழந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் திடீரென உடல்நல பிரச்சனை ஏற்பட்டு, ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் தீயாக பரவியது.
இந்த தகவல் சமந்தா ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அவர் விரைவில் இந்த பிரச்சனைகள் இருந்து மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த தகவல் குறித்து, சமந்தாவின் செய்தி தொடர்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது, சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், சமத்தா தற்போது ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் நல்ல உடல் நிலையுடன் ஓய்வெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை கேட்டு ரசிகர்கள் நிம்மதியாக இருக்கின்றனர்