விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிக்கு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வர இப்படத்தை மிகப்பெரிய ஹிட் படமாக கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றார் விஜய். ஏனென்றால் மிகுந்த எதிர்பார்ப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
எனவே தன் அடுத்த படத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்ப காத்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜுடன் தளபதி 67 படத்தில் இணைவது உறுதியாகியுள்ளது.
எனவே விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாகவும், படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
அதில் அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவல் என்னவென்றால் இப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பது உறுதியாகிவுள்ளதாகவும், அதற்காக அவருக்கு 10 கோடி சம்பளமாக பேசப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது.
சமீபத்தில் யாஷ் நடிப்பில் வெளியான KGF இரண்டாம் பாகத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார் சஞ்சய் தத்.