தமிழ் சினிமாவின் தளபதியாக ரசிகர்களின் இதயத்தில் இருப்பவர் நடிகர் விஜய். வாரிசு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஜய் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வாரிசு படம் முடிவடைந்ததும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் விஜய் எது செய்தாலும் அது பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இது சமீபகாலமாகத்தான் நடந்து வருகின்றது. அந்த வகையில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக வாக்களிக்க விஜய் சிவப்பு மற்றும் கருப்பு நிற சைக்கிளில் வந்திருந்தார்.
இது அப்போதைய சூழலில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. விஜய் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தான் சைக்கிளில் வந்தார் என்றும், சிவப்பு மற்றும் கருப்பு சைக்கிளில் வந்து மறைமுகமாக குறிப்பிட்ட கட்சிக்கு விஜய் ஆதரவு தருகின்றார் என்றும் பல பேச்சுக்கள் உலா வந்தன.
இந்நிலையில் விஜய் சைக்கிளில் வந்த உண்மையான காரணத்தை அவரது நெருங்கிய நண்பரான சஞ்சீவ் கூறியுள்ளார். சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வரும் சஞ்சீவ் சில படங்களிலும் நடித்துள்ளார். விஜய்யின் நெருங்கிய நண்பரான இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் சைக்கிளில் வந்ததைப்பற்றி கூறியுள்ளார்.
அவர் கூறியது, விஜய் சைக்கிளில் வந்ததைப்பற்றிய செய்திகளை கேட்டு அவருக்கு போன் செய்தேன். அதற்கு அவர், வாக்களிக்கும் இடம் என் வீட்டின் அருகில் தான் இருக்கின்றது. அதற்கு நான் காரை எடுத்துக்கொண்டு செல்வது சரியாக இருக்காது. அப்படியே நான் காரை எடுத்துக்கொண்டு சென்றால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும்.எனவே தான் நான் சைக்கிளில் சென்றேன் என்றாராம் விஜய்.