Skygain News

ஆபத்தை உணராமல் சாகசத்தில் ஈடுபடும் பள்ளி கல்லூரி மாணவா்கள்..! நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்…?

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வழியாக ஆற்காடு பனிமனையில் இருந்து பல வழி தடங்களில் கிராமபுற பகுதிகளுக்கு நாள் தோறும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பல பேருந்துகள் முறையாக முழுமையாக குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று சேருவதில்லை எனவும் பேருந்து ஓட்டுனா் மற்றும் நடத்துனா்களின் பொருப்பற்ற செயலால் பழுதாகி விட்டதாக பேருந்தை பாதியிலேயே நிறுத்திவிடுவதும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனிடையே பல வழிதடங்களில் பேருந்துகள் இல்லாததால் கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அனைவருக்கும் இந்த ஒரே அரசு பேருந்தில் ஏறவேண்டிய பரிதாப நிலைக்கு ஆளாகின்றனா். இதனால் பேருந்தில் இடம் இல்லாமல் பொதுமக்கள் வயதானவர்கள் என அனைவரும் பேருந்தில் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

இதனை சாதகமாக பயன்படுத்தி பள்ளி,கல்லூரி மணவா்கள் பேருந்தில் ஜன்னல் மற்றும் படிகளில் தொங்கியும், பேருந்து வாசற்படியில் தொங்கியும் பேருந்தின் மேற்கூறை மீது ஏறியும் ஆபத்தை உணராமல் சாகசத்தில் ஈடுபடும் காட்சி பொதுமக்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்துவதாக தெரிகின்றது.

இதேபோல் நேற்று மாலை ஆற்காடு பணிமனையில் இருந்து ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, பாணாவரம் வழியாக வெளிதாங்கிபுரம் செல்லும் அரசு பேருந்தில் மாணவா்கள் படியில் தொங்கியபடியும் ஜன்னல் கம்பியில் ஏறி நின்று மேற்கூறையின் மீது ஏறியும் சாகசத்தில் ஈடுபட்டனா். இதை கண்ட நடத்துனா் பேருந்தை நிறுத்தி அவா்களை இறங்கும் படி கூறியுள்ளார் . அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் ஓட்டுனா் நடத்துனரை வாய்க்கு வந்தபடி மாணவா்கள் வசை பாடியுள்ளனா்.

எனவே இது போன்று சாகசத்தில் ஈடுபடும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மீது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலர்களும் மாவட்ட நிா்வாகத்தினருக்கு பெரிதும் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More