Skygain News

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை..! மாணவி தங்கியிருந்த விடுதியில் உறவினர்கள் முற்றுகை…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை சில்லாங் குளத்தில் செயல்பட்டு வரும் முத்துக்கருப்பன் மேல்நிலைப் பள்ளி கழிவறையில் அதே பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் ‌ ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் மகள் வைத்தீஸ்வரி என்பவர் நேற்றிரவு கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பசுவந்தனை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் மாணவியின் மரணம் குறித்து தங்களுக்கு தெளிவான தகவல் பள்ளி நிர்வாகம் சார்பில் கொடுக்கவில்லை என்று மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் மாணவி வைத்தீஸ்வரி தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More