தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி இளைஞர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் தான் செல்வராகவன். மேலும் இவனும் தனுஷ் சேர்ந்தாலே அப்படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பமான இவர்களது கூட்டணி தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என தரமான படைப்புகளை உருவாக்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு இக்கூட்டணி நானே வருவேன் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. மேலும் இவர்களுடன் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் இப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கதை உருவான விதம்பற்றி இயக்குனர் செல்வராகவன் பேசியுள்ளார்.அவர் கூறியதாவது, நானே வருவேன் கதையை நான் எழுதவில்லை. நானும் தனுஷும் எப்போதும் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் பற்றியேதான் பேசிக்கொண்டிருப்போம். அப்போது ஒரு நாள் தனுஷ் ஒரு கதையை கூறினார்.அக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அக்கதையை படமாக்க நினைத்தோம். அது தான் நானே வருவேன் திரைப்படம் என்றார் செல்வராகவன்.