நடிகர் சிம்பு நடித்திருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ள நிலையில் வருகிற செப்டம்பர் 2-ந்தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது மற்றும் செப்டம்பர் 15- ந்தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை பல்லாவரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும், அதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி இடம்பெறும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் – இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் – சிம்பு கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையாடா’ படங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் இந்த காம்போவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

அந்த வகையில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து ‘காலத்துக்கும் நீ வேணும்’ என்ற பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.