இந்திய அணி T20 உலகக்கோப்பைக்காக தற்போது தயாராகி வருகின்றது. உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல சர்ச்சைகள், கேள்விகள் வலம் வந்தன. ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிகொல்லாமல் இந்திய அணி பயிற்சியை துவங்கியது.
மேலும் அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா அணியுடன் T20 தொடரில் விளையாடவுள்ளது இந்தியா. டி20 உலக கோப்பை தொடருக்கு ஒரு முன்னோட்டமாக இந்த தொடர் கருதப்படுகிறது., இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களை வைத்து பிளேயிங் லெவனை தேர்வு செய்ய ரோகித் கணக்கு போட்டு இருந்தார்.
இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமிக்கு ஆஸ்திரேலிய தொடர் மிகவும் முக்கியமான பரீட்சையாக கருதப்பட்டது. இந்த நிலையில் முகமது ஷமி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சோதனையில் தெரிய வந்தது.
இதை அடுத்து முகமது ஷமி தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வில் இருக்கிறார். இதனால் முகமது ஷமி ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனை அடுத்து முகமது ஷமிக்கு பதிலாக வேக பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் இந்திய அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் முதல் t20 போட்டி நாளை நடைபெற இருக்கின்றது