இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டி முடிந்தவுடன் நிருபர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேசுகையில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணிக் கேப்டன் கேசவ் மகாராஜிற்கு வாழ்த்துக்கள்.
நினைத்ததுபோல், இரண்டாவது இன்னிங்ஸில் பனியில் தாக்கம் இருந்தது. இதனால்தான், தென்னாப்பிரிக்க பௌலர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என நினைக்கிறேன். இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் அபாரமாக இருந்தது.
பந்துவீச்சு துறையும் இன்று சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக, அறிமுக வீரர் ஷாபஸ் அகமது அனுபவம் வாய்ந்த பௌலரைப் போல செயல்பட்டார்” எனக் கூறினார். இதையடுத்து அடுத்த போட்டியில் தான் ரன்களை குவிப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார் ஷிகர் தவான்