தாம்பரம் அடுத்த ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது.இந்த அரசு மதுபான கடையில் பாண்டியன் என்பவர் அனுமதி பெற்று பார் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் பாண்டியன் என்பவர் நடத்தி வரும் மதுபான கடைக்கு சென்ற இளைஞர் தகராறில் ஈடுபட்டு நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார்,
இதில் .அதிர்ஷ்ட வசமாக கடையில் இருந்த ஊழியர்கள் எந்த ஒரு காயம் இன்றி உயிர் தப்பினர்,
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் வெடிகுண்டு வீசிய நபரை தற்போது கைது செய்து தீவிர விசாரனை செய்ததில்,
கடந்த வாரம் மதுபான கடையில் இருந்த நாய்குட்டியை துன்புறுத்திய போது அதனை கண்ட பார் ஊழியர்கள் தன்னை கடுமையாக திட்டியதாகவும்,அதே போல் நேற்று அதே மதுபான கடையில் இரவு மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்ற போது சேற்றில் சிக்கியதாகவும் வாகனத்தை எடுப்பதற்க்கு உதவி கேட்ட போது பார் ஊழியர்கள் வர மறுத்ததால் இந்த சம்பவவங்களுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் வெடிகுண்டு வீசியதாக வாக்குமூலம் அளிக்க்பட்டதை அடுத்து தொடர்ந்து இளைஞரிடம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.