Skygain News

கோவையில் கார் வெடிப்பில் உயிரிழந்த முபின் பற்றி தெறித்த திடுக்கிடும் தகவல்கள்..!

கோவையில் கடந்த 23-ந் தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. கோவை மாநகர போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த முபின் தீபாவளியையொட்டி மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து முபினின் கூட்டாளிகளான 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, முபினும், அவனது கூட்டாளிகளும் கோவையில் தீபாவளி தினத்தன்று 3 கோவில்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், இதற்காக அவர்கள் ஒத்திகை மேற்கொண்ட அதிர்ச்சி தகவல்களும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தை அரங்கேற்றுவதற்காக அவர்கள், பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் கையாளும் “ஒற்றை ஓநாய்” தாக்குதல் முறையை பின்பற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது, பயங்கரவாத அமைப்பின் உதவியின்றி தனியாக சித்தாந்தத்திற்காக தாக்குதல் நடத்தும் முறை ஆகும். இந்த ஒற்றை ஓநாய் தாக்குதல்கள் ஐ.எஸ்., அல்கொய்தா ஆகிய அமைப்புகளின் சித்தாந்தத்தில் உருவானவை எனவும், இது வெளிநாடுகளில் பலமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More