Skygain News

சர்வாதிகாரத்தை உங்கள் கட்சியில் மட்டும் காட்டுங்கள் இல்லையென்றால் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் – ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி

விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி விருதுநகர் பொதுப்பணித்துறை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவிக்கையில், திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளனர்.


ஆர்ப்பாட்டத்திற்கு உடன் வந்தவர்களை கைது செய்தனர், என்னையும் ஜனநாயக அராஜகத்தில் கைது செய்தனர்.

2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரானா காலத்தில் முடக்கம் செய்திருந்த போது கிராம அளவில் சென்றார், ஆளுநர் மாளிகைக்கும் ஸ்டாலின் சென்றார். அதிமுக எடப்பாடி, பாஜக அண்ணாமலை என ஆர்ப்பாட்டத்திற்கு வந்த என்னையும் ஜனநாயத்தின் மாண்பை மீறி செயல்பட்டுள்ளார்.

காவல்துறையை எதிர் கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள்.ஜனநாயகத்தின் மாண்பை தர மறுக்கின்றனர் எதிர்கட்சிகளுக்கு சாதாரண போராட்டங்களுக்கு கூட அனுமதி வழங்க மறுக்கிறார்கள். அரசு கொடுத்த வாக்குறுதியை எதுவும் நிறைவேற்றவில்லை ஆளுநர் திரும்ப பெற என எல்லாவற்றிற்கும் திமுக மட்டும்தான் போராட்டம் நடத்துனுமா?

ஸ்டாலின் சர்வாதிகாரத்தை அவருடைய கட்சியில் மட்டும் காட்ட வேண்டும், இல்லையென்றால் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார் .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More