தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு.சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.இதையடுத்து தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகின்றார் சிம்பு.
இந்நிலையில் ஐசரி கணேசன் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கிய இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.இதைத்தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் 50-வது நாள் வெற்றி விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சிம்பு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை சித்தி இத்னானி, நடிகர் சரத்குமார், நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் சிம்பு பேசியதாவது ,ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். படம் செய்துகொண்டிருக்கும்போது நிறைய அப்டேட்ஸ் கேட்கிறீர்கள். உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு தயாரிப்பாளரோ, இயக்குநரோ, ஹீரோவோ ஒரு படத்தை ரசிகர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு நிறைய மெனக்கெடுகிறோம்.
தினமும் நீங்கள் அப்டேட் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தால்; தவறான முடிவு எடுக்க வாய்பு இருக்கிறது. அதனால் ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் எங்களின் முதல் வேலை. எனவே எங்களுக்கு அந்த ஸ்பேஸ் கொடுத்தால்தான் நல்ல படங்கள் வரும். அதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் எல்லா ரசிகர்களும் ஒரு ஹீரோவை தலை மேல் தூக்கி வைப்பார்கள். நான் எனது ரசிகர்களை தலை மேல் தூக்கி வைக்க ஆசைப்படுகிறேன். என் படத்துக்கு மட்டுமில்லை. அனைத்து படங்களுக்கும் அப்டேட்ஸ் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள். உங்களுக்கு நல்ல படம் கொடுக்க நாங்கள் எல்லோரும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இதை பத்து தல பட இயக்குநர் சொல்ல சொன்னார்” என்று தெரிவித்துள்ளார் சிம்பு.