Skygain News

பொன்னியின் செல்வன் பட பாடகர் திடீர் மரணம்..அதிர்ச்சியில் திரையுலகம்..!

தமிழில் பல பாடல்களை பாடி பிரபலமான பாடகர் பம்பா பாக்யா மறைந்தது ஒட்டுமொத்த திரையுலகத்தையும்,ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல பாடகரான பம்பா பாக்யா முதலில் மேடை கச்சேரிகளில் பாடிதான் தனது கெரியரை தொடங்கினார். அவரது வசீகரிக்கும் குரல் வளத்தை கண்ட ஏஆர் ரஹ்மான் தனது இசையில் பாட அவருக்கு வாய்ப்பளித்தார்.

அதன்படி ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான ராவணன் படத்தில் இடம்பெற்ற கிடா கிடா கறி அடுப்புல கிடக்கு என்ற பாடல்தான் பாக்யாவின் முதல் பாடல். இருப்பினும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் இடம்பெற்ற சிம்டாங்காரன் பாடலை பாடியதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் பம்பா. அதன் பின் பல பாடல்களை பாடிய பாம்பா பாக்கியா 2 .0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடலையும் பாடினார்.இப்பாடல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

இந்நிலையில் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திலும் பம்பா பாக்கியா பாடியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான பொன்னி நதி பாடலைப்பாடியுள்ளார் பாக்கியா.49 வயதான பம்பா பாக்யா நேற்று மதியம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அண்ணா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய துடிப்பு குறைந்து, சிறுநீரக செயல்பாடும் குறைந்து வயிற்றில் அதிக நீர் சேர்ந்திருப்பதாக தெரிவித்தனர்.இதையடுத்து நேற்று இரவு பம்பா பாக்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சித்தியை கேட்ட ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More