நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் டாக்டர் மற்றும் டான் என தொடர்ச்சியாக இரு வெற்றிகளை கொடுத்துள்ளார். இதையடுத்து ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகின்றது.
இந்நிலையில் பிரின்ஸ் பட விழாவில் சிவகார்த்திகேயன் அயலான் படத்தை பற்றி பேசியுள்ளார். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் வித்தியாசமான கதைகளத்தோடு சினிமாவிற்கு வந்தவர் ரவிக்குமார். இவரின் அடுத்த படைப்பாக கடந்த இரண்டு ஆண்டாக ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்திசிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள அயலான் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக பலமுறை இதன் படப்பிடிப்பு தடைபட்டது.இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன், சயின்ஸ் ஃபிக்சன் மற்றும் கிராபிக்ஸ் படமாக அயலான் இருக்கும் என படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இதன் படப்பிடிப்பு பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. இந்தப்படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ‘பிரின்ஸ்’ படத்தின் புரோமோஷனில் ‘அயலான்’ குறித்து பேசிய சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் இந்த மாதிரி ஒரு படம் யாரும் பார்த்தது கிடையாது. இனிமேல் பார்ப்பீங்க என தெரிவித்துள்ளார். இந்தப்படத்தை அடுத்தாண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.