ஆடுதுறை மருத்துவக்குடி விசாலாட்சி அம்மாள் காசி விஸ்வநாதர் கோயிலில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருப்பணி முடிந்து வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக இந்தியா, இலங்கை, நேபாளம், நாட்டிலிருந்து 45 புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் அகில பாரதீய சந்நியாசிகள் சங்க துறவியர்கள் எடுத்து வந்தனர்.
45 புண்ணிய நதிகளுக்கும் நேற்று கலச பூஜை சிறப்பு ஆராதனைகளுடன் நடந்தது. சென்னை அன்னை ஞானேஸ்வரி கிரி சிவ சபா தலைமையில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்க செயலாளர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்த, திருப்பணி கமிட்டி தலைவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் துறவியர்கள் கிராம நாட்டாமைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்