Skygain News

ஆடுதுறை மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் கோயிலில் 45 புண்ணிய தீர்த்தங்களுக்கு சிறப்பு கலச பூஜை..!

ஆடுதுறை மருத்துவக்குடி விசாலாட்சி அம்மாள் காசி விஸ்வநாதர் கோயிலில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருப்பணி முடிந்து வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக இந்தியா, இலங்கை, நேபாளம், நாட்டிலிருந்து 45 புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் அகில பாரதீய சந்நியாசிகள் சங்க துறவியர்கள் எடுத்து வந்தனர்.

45 புண்ணிய நதிகளுக்கும் நேற்று கலச பூஜை சிறப்பு ஆராதனைகளுடன் நடந்தது. சென்னை அன்னை ஞானேஸ்வரி கிரி சிவ சபா தலைமையில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்க செயலாளர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்த, திருப்பணி கமிட்டி தலைவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் துறவியர்கள் கிராம நாட்டாமைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்  

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More