ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500 க்கும் மேற்பட்ட மீனவபர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தார்கள். இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சொல்லி இலங்கை கடற்படையினர் தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை நடுக்கடலில் வைத்து கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 14 மீனவர்களும் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களா அல்லது புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களா என தற்போது போது வரை தெரியவில்லை .
எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்திய பின்னரும், லட்ச முறை கோரிக்கைகளை முன்வைத்த பின்னரும் கூட தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அடாவடி மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .