Skygain News

பாலியல் புகாரில் சிக்கி ஆஸ்திரேலியாவில் கைதான ஸ்ரீலங்காவின் ஸ்டார் வீரர்..!

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவுபெறவுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவு ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவுபெற்றுவிட்டன. இந்த பிரிவில் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு தகுதிபெறப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் பங்கேற்றன.

இப்போட்டி கடைசிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இறுதியில் 6 பந்துகளில் 5 ரன்களை அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. வோக்ஸ் ஒரு பவுண்டரி அடித்ததால், இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 144/6 ரன்களில் வெற்றிபெற்று, நியூசிலாந்து அணியுடன் குரூப் ஏ பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியது.

இலங்கை அணி அரையிறுதியில் இருந்து வெளியேறிவிட்டதால், அவர்கள் நாடுதிரும்ப ஆயத்தமானார்கள். இன்று சிட்னியில் இருந்து நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு இலங்கை அணி வீரர் தனுஷா குணதிலகாவை சிட்னி காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தற்போது கிடைக்கப்பெற்ற தகவலில், ‘குணதிலகா மீது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருப்பதாகவும், இதனால்தான் கைது செய்யப்பட்டுள்ளார்’ எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னமும் வெளிவரவில்லை.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More