இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சற்று உயரம் சென்றுள்ளது . சென்செக்ஸ் 548 புள்ளிகள் அதிகரித்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் சிறிய சரிவுடன் தொடங்கினாலும் பின்னர் பங்கு வர்த்தகம் படிப்படியாக ஏற்றம் கண்டது. பன்னாட்டு நிதியம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை குறைத்தது போன்ற எதிர்மறையான செய்திகள் இருந்தபோதும் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா மற்றும் எஸ்.பி.ஐ. உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல் மற்றும் கோடக் மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,755 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,565 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 145 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.259.71 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.25 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 547.83 புள்ளிகள் உயர்ந்து 55,816.32 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 157.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,641.80 புள்ளிகளில் முடிவுற்றது.