Skygain News

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர அனுமதி இல்லை..! மத்திய அரசியின் அறிவிப்பால் பீதியில் மருத்துவ மாணவர்கள்..

மக்களவையில் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநில உறுப்பினர்கள் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு மேற்குவங்க மாநில மருத்துவ கல்லூரிகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது உண்மையா? எனவும், மாநில மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை அனுமதிக்கும் விதிமுறை தேசிய மருத்துவக் கல்வி ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தனர்.

அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாவது :

நாட்டின் மருத்துவ கல்வி ஒழுங்குமுறை அமைப்பான “தேசிய மருத்துவக் கல்வி ஆணையம்” அளித்த தகவலின்படி மேற்குவங்க மாநிலத்தில் உக்ரைனியில் இருந்து திரும்பிய 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கான எந்த தகவலும் இல்லை.

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வெளிநாட்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை மாநில மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர விதிகள் ஏதும் இல்லை.

அதேபோல் , 2019 விதியின்படி வெளிநாட்டு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பை இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யவோ அல்லது இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் படிப்பைத் தொடரவோ இடமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள எந்த ஒரு மருத்துவக் கல்வி நிலையங்களிலும், கல்லூரிகளிலும் வெளிநாட்டு மாணவர்களை இடமாற்றம் செய்யவும் அல்லது உள்நாட்டில் படிக்க வைக்கவோ தேசிய மருத்துவக் கல்வி ஆணையத்தால் எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் எழுத்துப்பூர்வ பதில் கொடுக்கப்பட்டுள்ளது .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More