பாலிவுட் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். தற்போது தமிழ் சினிமாவில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றார் சன்னி லியோன்.இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு கேரளாவில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாக கூறி 20 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார் சன்னி லியோன்.
ஆனால் ஒப்புக்கொண்டப்படி நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்றும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தன் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லாததால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கால் தனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் சன்னி லியோன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி, இந்த வழக்கு மீண்டும்ன் விசாரணைக்கு வரும் வரை சன்னி லியோன் மீது எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.