Skygain News

மாரடைப்பு காரணமாக தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மரணம்..! பிரபலங்கள் பலர் இரங்கல்

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாரக இருந்தவர் கிருஷ்ணா. இவர் மொத்தம் 325 திரைப்படங்களில் நடித்துள்ளார். கிருஷ்ணா 2016 ஆம் ஆண்டில் ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்கிற படத்தில் கடைசியாக நடித்துள்ளார். இவரின் மகன் ‘மகேஷ்பாபு’, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆக வளம் வந்தவர்.

இந்நிலையில் இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கிருஷ்ணா நேற்று முன் தினம் நள்ளிரவில் திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதனால் பதறிப் போன குடும்பம் அவரை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன் பின்னர் சுயநினைவிற்கு திரும்பி உள்ளர்.

இதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது .செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரது ரசிகர்களும், மகேஷ் பாபு ரசிகர்களும் விரைவில் கிருஷ்ணா குணமடைய கடவுளை வேண்டி வந்தனர்.

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணா, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாது பிறமொழி ரசிகர்களும் பிரபலங்களூம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More