இந்தியா தற்போது நடைபெறும் T20 உலககோபியில் அரையிறுதிக்கு சென்றுள்ளது.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார் சூரியகுமார் யாதவ்.
தற்போது நடைபெற்ற ஜிம்பாபவே போட்டியிலும் சூரியகுமார் யாதவ் அருமையாக விளையாடி அரைசதம் அடித்தார்.இந்நிலையில்3வது அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், நடப்பாண்டில் மட்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை விளாசி சாதனை படைத்திருக்கிறார்.
இதன் மூலம் ஒரே ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.மேலும் இந்தியா கோபி;ஐயை வெல்ல சூரியகுமார் யாதவ் மிக முக்கியமான வீரராக இருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்