செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 42வது வார்டு அன்னை அஞ்சுகம் பூங்கா அருகில் புதிய நியாயவிலை கட்டிடத்திற்க்கு இடம் தேர்வான நிலையில்,
தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய நியாயவிலைக்கடைக்கு நேற்று பூமிபூஜை போடப்பட்டது.
இந்த பூமிபூஜையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா பங்கேற்று பணிக்கான முதல் செங்கல்லை எடுத்துக்கொடுத்து துவக்கிவைத்தார்.
இந்த பூமிபூஜையின் போது அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது.
மேலும் இங்கு அமையவுள்ள புதிய நியாயவிலைகடையின் சுற்றளவு, மக்கள் பயண்பாட்டு இடங்கள்,ரேஷன் முகப்பு அமையும் பகுதிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா அதற்கான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டல தலைவர் ச ஜெயப்பிரதீப்,மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.