விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் வேம்பி ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் அரசு நலத்திட்ட வழங்கும் விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில் :
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் அல்லாமல் நமது விழுப்புரம் மாவட்டம் போன்று அதிக விவசாய நிலங்கள் உள்ள இடங்களில் விவசாயிகள் பயன்படும் வகையில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தமிழக முதலமைச்சர் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது இதன் கீழ் தரிசு நிலங்கள் மேம்படுத்தும் வகையில் அதாவது விலை நிலமாக மாற்றுவது ஏற்ப உரமிடுதல் போன்ற விவசாயிகள் பயன்பெறும் இந்த திட்டத்தினை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 873 கிராமங்களில் இத்திட்டம் இன்று தொடங்கப்பட்ட உள்ளன.
மேலும் கடந்த 10 ஆண்டுகள் மேலாக ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்காமல் கிடப்பில் போற்றப்பட்டுள்ளது அதனையும் போக்கும் விதத்தில் விவசாயி மேம்படுத்தும் விதத்திலும் இந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டன அதில் விழுப்புரம் மாவட்டத்தில் பொறுத்தவரை 5000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டன மேலும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக தமிழக முதல்வர் பல திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகன்,சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.இலட்சுமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.