தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது . சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று அறிவித்திருக்கிறது. மேலும் 27 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று முதல் 20 ஆம் தேதி வரைக்கும் நான்கு நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை ,நீலகிரி ,விருதுநகர் ,தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, சேலம், கள்ளக்குறிச்சி , தர்மபுரி, ஈரோடு , கரூர், திருச்சி, நாமக்கல் , சிவகங்கை , புதுக்கோட்டை, கடலூர் , பெரம்பலூர், அரியலூர் , மயிலாடுதுறை, சிவகங்கை, நாகப்பட்டினம் ,திருவாரூர் , தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் , கடலூர், புதுக்கோட்டை ,சிவகங்கை ,தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் 20ஆம் தேதி கன முதல் கன மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்திருக்கிறது.