Skygain News

தமிழறிஞர் நெடுஞ்செழியன் காலமானார்..!

தமிழறிஞரும், திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் சென்னயில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான திருச்சிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் நெடுஞ்செழியன் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதை அடுத்து நெடுஞ்செழியன் உடலுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது :

அண்மையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் செம்மொழி விருது பெற்ற தமிழறிஞர் நெடுஞ்செழியன் அவர்களின் திருவுடலுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More