தமிழறிஞரும், திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் சென்னயில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான திருச்சிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் நெடுஞ்செழியன் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதை அடுத்து நெடுஞ்செழியன் உடலுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது :
அண்மையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் செம்மொழி விருது பெற்ற தமிழறிஞர் நெடுஞ்செழியன் அவர்களின் திருவுடலுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அண்மையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் செம்மொழி விருது பெற்ற தமிழறிஞர் நெடுஞ்செழியன் அவர்களின் திருவுடலுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. @mkstalin pic.twitter.com/0NNzK6Ckvi
— Subramanian.Ma (@Subramanian_ma) November 4, 2022