Skygain News

இந்திய அணி தேர்வு..கொந்தளித்த தமிழக ரசிகர்கள்..!பிண்ணனி என்ன ?

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டார். அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா காயம் காரணமாக தாயகம் திரும்பியதை அடுத்து அவருக்கு பதிலாக இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது.

நல்ல பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திகை நீக்கிவிட்டு தீபக் ஹூடாவிற்கு வாய்ப்பு கொடுத்ததும், அனுபவ வீரரான அஸ்வினை டீமில் எடுக்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் ஆகியோர் அணியில் இடம்பெறுவது சிலருக்கு பிடிக்கவில்லை என ரசிகர்கள் காட்டமாக பேசி வருகின்றனர்.

ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா பந்த் பதிலாக தினேஷ் கார்த்திகை அணியில் சேர்த்தார். இதன் காரணமாக ரோகித் சர்மா தவறான முடிவு எடுப்பதாக கூறி தொடர்ந்து பலரும் விமர்சித்து வந்தனர். இதே போன்று ஆகாஷ் சோப்ரா, சபா கரிம் உள்ளிட்டவர்களும் தினேஷ் கார்த்திக்கை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், தற்போது செய்வது அறியாமல் ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக்கை காரணமே இல்லாமல் அணியை விட்டு நீக்கினார்.

ஜடேஜா இல்லாத நிலையில், இந்திய அணியில் தற்போது தினேஷ் கார்த்திக் மட்டும் தான் பினிஷராக இருந்தார். தற்போது இருவரும் இல்லாத நிலையில், ரிஷப் பண்டை அணியில் சேர்த்து இருப்பது ரோகித் சர்மா எந்த யோசனையில் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதனிடையே, அணியில் இருந்த ஒரே இடது கை வீரரான ஜடேஜா அணியிலிருந்து சென்றதால் தான், ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எ

ஏனினும் இது நம்பும் படி இல்லை. இதே போன்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை சேர்க்காமல், ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு வழங்கி இருப்பதும், தமிழக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More