Skygain News

விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுப்பதை தமிழக அரசு வியாபாரமாக பார்க்காமல், வளர்ச்சியாக பார்க்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி அரசு தலைமை பொதுமருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் குறைபாடு இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு புகார் கூறப்பட்டுவந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு பொதுமருத்துவமனையை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு செய்து பல்வேறு குறைபாடுகளை சரிசெய்ய அறிவுறுத்தியிருந்தார். இவைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளதா என இன்று மீண்டும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் புதுச்சேரி அரசு மருத்துவ துறையை மேம்ப்படுத்த மாதமாதம் கூட்டம் நடத்த்ப்படுகிறது எனவும், புதுச்சேரியில் 11 அறுவை சிகிச்சை மையங்கள் புதிதாக திறக்கப்பட உள்ளது, அதற்கு இயந்திரங்கள் வாங்கவும், புதிதாக 350 கருவிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு மருத்துவ நிபுனர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட உள்ளது என தெரிவித்த தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரியில் தற்போது நிதி பற்றாகுறை இல்லை என்றவர் அரசு நெடு நாட்களாக வரி ஏற்றவில்லை அதற்காக தான் மத்திய அரசு மாநில அரசு வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக வலி தெரியாமல் வரி உயர்த்த பட வேண்டிய சூழலில் அரசு உள்ளது, அது மக்களை பாதிக்காத அளவு இருக்கும் என்றார். மேலும் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க வேண்டும், இதை தமிழக அரசு வியாபாரமாக பார்காமல், வளர்ச்சியாக பார்க்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More