நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு கடந்த 2020 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்திற்கு ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவில் தற்போது சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தினால் கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள் என்பது குறித்து அந்த மனுவில் விரிவான புள்ளி விவரங்களை தமிழ்நாடு அரசு குறிப்பிட்டு இருக்கிறது.
இந்த ரிட் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சுதான்சு தூலியா அமர்வு அண்மையில் விசாரித்து வந்தனர். அப்போது மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாடு அரசின் வலியுறுத்தல்களை கருத்தில் கொண்டு ரீட் மனு விசாரணைக்கு உகந்தது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை அடுத்து நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசியல் தாக்கல் செய்த ரிட் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கும் ரிட் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.