சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக 150 ற்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர். இவர்கள், கடந்த ஒருவருடத்திற்கு மேலாக தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை என கூறி, நகராட்சி வாயிலின் முன்பு திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சியின் ஒப்பந்ததாரர்கள் மாறும் பொழுது ஊதிய உயர்வு வழங்குவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், ஒப்பந்தாரர் மாறியும் இதுவரை ஊதிய உயர்வு வழங்கவில்லை எனவும் புகார் கூறி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதால் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் .