Skygain News

ஊதிய உயர்வு கேட்டு துப்புரவு தொழிலாளர்கள் தீடீர் வேலை நிறுத்த போராட்டம்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக 150 ற்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர். இவர்கள், கடந்த ஒருவருடத்திற்கு மேலாக தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை என கூறி, நகராட்சி வாயிலின் முன்பு திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சியின் ஒப்பந்ததாரர்கள் மாறும் பொழுது ஊதிய உயர்வு வழங்குவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், ஒப்பந்தாரர் மாறியும் இதுவரை ஊதிய உயர்வு வழங்கவில்லை எனவும் புகார் கூறி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதால் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More