சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சத்யா என்ற இளம்பெண் கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்துருந்தபோது சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்த சதீஷ் என்ற இளைஞர் அவரை பின்தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து சத்யாவை தன்னை காதலிக்குமாறு அவர் வற்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் சத்யாவை மின்சார ரயில் வந்து கொண்டிருந்தபோது தள்ளிவிட்டுள்ளார். இதில் சத்யா தலை நசங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கு காரணமான சதிஷ்சை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்துள்ளார்.
அந்த வகையில் பரங்கி மலையில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர் சதீஷ் தனி படையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மகள் சத்யா கொடூரமாக கொல்லப்பட்ட சோகத்தில் இருந்த அவரது தந்தை மாணிக்கம் திடீர் நெஞ்சு வலி காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.