காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆவணி மாத ஏகாதசி நட்சத்திரத்தையொட்டி உள் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.
ஏகாதசி உள்புறப்பாடு உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலையில் இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு,வெண் நிற பட்டு உடுத்தி,வைர,வைடூரிய தங்க, திருவாபரணங்கள், பஞ்ச வர்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் மேளதாளங்கள் முழங்க,வேத பாராயண கோஷ்டியினர் பாடிவர ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
ஸ்ரீதேவி, பூதேவியுடன், கோவில் வளாகத்தில் உலா வந்த வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் கூடி வந்து தரிசனம் செய்தனர் .