காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,எம்பியுமான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் இன்று கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார் .
கிட்டத்தட்ட 150 நாட்கள். 12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பயணம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரிக்கு செல்கிறார்.

கன்னியாகுமரிக்கு வரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறியிருந்த நிலையில், கோ பேக் ராகுல் என்ற முழக்கத்தோடு போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்தார். இதற்கிடையில் கன்னியாகுமரிக்கு அவர் ரயிலில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க போராட்டம் நடத்த சென்ற இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவையிலிருந்து கன்னியாகுமரிக்கு சென்ற போது, திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் அர்ஜுன் சம்பத்தை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர்.
