Skygain News

அடுத்த ராணியிடம் செல்கிறது கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம்..!

பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 96 வயதான அவர் பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் என்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் பின்னர் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ள பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு அவரது மகன் இளவரசர் சார்லஸ் பிரிட்டன் மன்னராகியுள்ளார், அத்துடன் அவரது மனைவி கமிலா ராணியானார். இதன் மூலம் விலை உயர்ந்த கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமலாவசம் சென்றுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து கோஹினூர் வைரம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 21 கிராம் எடை கொண்ட 105 காரட் கோஹினூர் வைரம் ராணியின் கிரீடத்தில் உள்ளது .இதை கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அவர் மறைவை ஒட்டி புதிய ராணி கமிலா விடம் சென்றுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More