இன்றைய இளைஞர்கள் கையில் பணமில்லை, நல்ல படிப்பில்லை, நல்ல வேலை இல்லை என்று கவலை படுவதை விட பெரிய தொப்பை இருக்கிறதே என்று தான் அதிகம் கவலைப்படுகின்றனர் .
இன்றைய கால சமூகத்தின் உணவு முறை மற்றும் வாழ்க்கை சூழல் காரணமாக பெரும்பாலனவர்களுக்கு தொப்பை வந்துவிடுகிறது . இது இன்றையபெரும்பாலான இளைஞர்கள் மற்றும் வயது முதிர்ந்த என அனைத்து தரப்பு ஆண்களின் முக்கிய பிரச்னையாக இருப்பது தொப்பை. ஆண்கள் மட்டுமல்லாது பெண்களுக்கும் இது ஒரு பெரிய பிரச்னையாகவே இருக்கிறது.
தொப்பை குறைப்பதற்காக அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்வது, உடற்பயிற்சி கூடம் செல்வது, கசாயம் குடிப்பது, ஜூஸ் குடிப்பது என இருக்கிற அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்வர். ஆனால் அதற்கான பலன் எவ்வளவு பேருக்கு கிடைத்துள்ளது என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
உயிருக்கு ஆபத்தா?
தொப்பையினால் பலவித நோய்கள் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொப்பை இருப்பது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு தான் என கூறுகின்றனர். வயிற்று பகுதி அதாவது தொப்பையில் சேரும் கொழுப்புகள் தான் புற்றுநோய் முதல் இதயநோய் வரை பலவித நோய்களை உருவாக்குகின்றன.
கொழுப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்..?
வயிற்று பகுதியில் கொழுப்புகள் சேருவதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் தேவையற்ற உணவுகள் தான். மேலும் கலோரிகள் அதிகம் கொண்ட உணவு பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்வதாலும் கொழுப்பு ஏற்படுகிறது. நாளடைவில் இதனால் பலவித பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு, இரத்த நாளங்களில் பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.
தடுப்பதற்கான வழிமுறைகள் :
தொப்பை பிரச்னையை சரிசெய்ய சரியான வாழ்க்கை முறையை வாழ வேண்டும். சரியான உணவு பழக்கம், தினமும் உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியாமா சூழல், பழங்கள் உட்கொள்தல் போன்றவைகளை சரியாக பின்பற்றி வந்தால் தொப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.