Skygain News

பறக்கும் விமானத்தில் இதமாக இருக்க சிகரெட்டை பிடித்த மலேசிய விமானி..!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 156 பயணிகளுடன் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, மனைவியுடன் பயணம் செய்த மலேசியா நாட்டைச் சேர்ந்த கோபாலன் அழகன் (வயது 52) என்பவர் திடீரென மறைத்து வைத்திருந்த தன்னுடைய சிகரெட்டை எடுத்து விமானத்துக்குள்ளேயே புகைபிடிக்க தொடங்கி உள்ளார். இதற்கு சக பயணிகள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்துள்ளார். விமான பணிப்பெண்களும் கோபாலன் அழகனிடம் வந்து விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி விமானத்திற்குள் புகை பிடிப்பது குற்றம். புகை பிடிப்பதை நிறுத்துமாறு கூறி அறிவுறுத்தினர்.

இதுகுறித்து விமான பணிப்பெண்கள், விமானியிடம் புகார் தெரிவித்ததையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் சென்னையில் தரையிறங்கியதும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், கோபாலன் அழகனை விமானத்தில் இருந்து இறக்கி சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலன் அழகனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More