நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த கள்ளிகுளம் ஊரை சேர்ந்த எண்பது வயது மூதாட்டி மாடத்தி.கணவர் ஏழானை இறந்த பின்பு யாரும் ஆதரவின்றி தனிமையில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.இவருக்கு குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக தான் வசித்து வந்த வாடகை வீடு இடிந்து விழுந்துள்ளது.இதனையடுத்து வீடின்றி தவித்த மூதாட்டியின் நிலைமை அறிந்து அக்கம்பக்கத்தினர் அவரது உறவினர் அருகிலுள்ள ஊரில் வசித்து வருவதாக தெரிந்து மூதாட்டி மாடத்தியையும் அவரது வீட்டின் உடமைகளையும் ஆட்டோவில் ஏற்றி உறவினர் வீடான கும்பிகுளம் ஊருக்கு அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து உறவினர் வீட்டுக்கு சென்ற மாடத்தியை அவரது உறவினர் ஏற்கவில்லை எனவும் திரும்பவும் அவரது சொந்த ஊருக்கே திரும்ப போக சொன்னதாக கூறப்படுகிறது.இதனையடுத்து செய்வதறியாது திகைத்த மாடத்தி திரும்பவும் சொந்த ஊருக்கு செல்ல மனமில்லாமலும்உறவுகள் யாரும் இல்லாததாலும் கும்பி குளம் பேருந்து நிழற்குடையில் தங்கியுள்ளார்.மேலும் அப்பகுதி மக்கள் அவரது பரிதாபநிலையை கருத்தில் கொண்டு மூதாட்டிக்கு மூன்று வேளை உணவு கொடுத்து வருகின்றனர். இதனை அடுத்து அவரை உடனடியாக முதியோர் இல்லத்திற்கு சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்