திருவாரூரில் இருந்து நாகூர் செல்லும் பேருந்து பெருங்கடம்பனூர் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று பேருந்தை மறைத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது .
அவர்களை தட்டிக்கேட்ட பேருந்து நடத்தினர் ராஜாராமனை தகாத வார்த்தைகளால் திட்டி ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அருகில் கிடந்த கண்ணாடி துண்டால் நடத்துனர் ராஜாராமனின் தொடையில் குத்தியுள்ளனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் நடத்துனர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலாஜி விவின் முருகநாதன் ஆகியோர் மீது ஜாமினில் வெளிவர முடியாத மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.காயமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நடத்துனர் மற்றும் ஓட்டுநரை தாக்கியவர்களில் விவின் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 150 க்கும் மேற்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.