Skygain News

இரண்டு ஆண்டுகளாக காவல்துறையினருக்கு டிமிக்கி கொடுத்து வந்த கொள்ளையன் கைது..!

நாகர்கோவிலில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் அருகே அகஸ்தியர் காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 31) இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் திடீரென தலைமறை வாங்கிவிட்டார் இவரை போலீசார் தேடி வந்த நிலையில் போலீஸ் பிடியில் சிக்கவில்லை .

இதற்கிடையே இவர் மீது நீதிமன்ற பிடியானை பிறப்பிக்கப்பட்டது இந்த நிலையில் நாகர்கோவிலில் வாகன சோதனையின் போது மணிகண்டனை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அவரை வடசேரி போலீசார் கைது செய்தனர் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More