சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய போது மாநகர பேருந்து மோதி பள்ளி மாணவி விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு.
சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் சாலையில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவி லட்சுமிஸ்ரீ(17), மாநகர பேருந்து மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குரோம்பேட்டையில் உள்ள பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடி விட்டு வீடு திரும்பிய போது தடம் எண் 52எச் பொழிச்சலூரிலிருந்து அஸ்தினாபுரம் செல்லும் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓட்டுனர் தப்பியோடி விட்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.