Skygain News

வெள்ளத்தில் அடித்துச் சென்ற இளைஞரை மூன்றாவது நாளாக தேடும் பணி தீவிரம்..!

கச்சராபாளையம் அருகே மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் வெள்ள நீரில் அடித்து சொல்லப்பட்டார் அவரை மூன்றாவது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சோ மன்னார்குடி கிராமத்தில் உள்ள அணையில் கடந்த 12ம் தேதி கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கரண்ராஜ் (22) இளைஞர் அவருடைய நண்பர்கள் குணசேகரன் (20) மணிகண்டன்(19) சந்துரு (21) ஸ்ரீபதி(19) ஆகிய ஐந்து பேரும் மீன்பிடிக்க சென்றபோது எதிர்பாராமல் கரண் ராஜ் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து கச்சராபாளையம் காவல்துறையினர் மற்றும் சம்பவ இடத்திற்கு வந்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறை வீரர்கள் நேற்று இரவு வரை தீவிரமாக தேடி வந்தனர்.

தற்பொழுது மீண்டும் இன்று மூன்றாவது நாளாக தேடும்பணியில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறையினர் 20மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More