Skygain News

அரசு அலுவலகங்களுக்கு நேரத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஜனநாயக இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

புதுச்சேரி அரசு தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சட்டப்படியான வேலை நேரத்திற்கு வராத அதிகாரிகள், ஊரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரியும், நடவடிக்கை எடுக்க தவறிய பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த நிர்வாக துறையை கண்டித்து சமூக ஜனநாயக இயக்கங்களை சேர்ந்தவர்கள் சட்டப்பேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் உள்பட பல்வேறு சமூக ஜனநாயக இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அரசு ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதை தலைமை செயலாளர் உறுதி செய்யவில்லை என்றால் அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More