Skygain News

பிட் அடித்ததை கடித்த ஆசிரியர்..! மாணவர் எடுத்த விபரீத முடிவு..!

பெங்களூருவில் 10ம் வகுப்பு படித்து வந்த மோஹின் என்ற மாணவன் தேர்வின்போது காப்பியடித்து ஆசிரியர்களிடம் மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறித்து . இதனால் ஆசிரியர்கள் மோஹினுக்கு கடுமையான தண்டனை கொடுத்ததாகவும் அதனால் மோஹின் மிகவும் வருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது .

இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பிய மாணவன் மோஹின், வீட்டிற்கு செல்லும் வழியில் நாகவாரா என்ற பகுதியில் இருந்த ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் மாடிக்குச் சென்றுள்ளார். 14 தளங்களைக் கொண்ட அந்த கட்டிடத்தின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளான்.

அப்போது கீழே விழாமல் மாடியில் உள்ள சுவற்றில் சிக்கிக்கொண்டு மோஹின் தொங்கிக் கொண்டிருந்தான். இந்நிலையில் அவனை காப்பாற்ற குடியிருப்பில் இருந்தவர்கள் சிலர் மொட்டை மாடிக்குச் சென்றனர். அப்போது அவர்கள் மோஹினின் கையை பிடிக்க சென்ற நிலையில், உடனடியாக தனது கையை சுவற்றில் இருந்து விடுவித்து மோஹின் கீழே விழுந்தான்.

இதில் மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதில் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பின் மாடிக்கு மோஹின் எவ்வாறு சென்றான் என்பது தெரியவில்லை. மேலும் இந்த தற்கொலை குறித்து சம்பிகே ஹள்ளி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More