Skygain News

காப்பி அடிப்பதாக கூறி நிர்வாணமாக்கிய ஆசிரியர்: அவமானத்தால் மாணவி தீக்குளிப்பு..!

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில், தேர்வில் காப்பி அடித்ததாக கூறி சந்தேகிக்கப்பட்ட ஆசிரியர் தனது ஆடைகளை கழற்றச் செய்து நிர்வாணமாக்கியதால் மாணவி ஒருவர் தனக்கு தானே தீவைத்து கொண்டுள்ளார். அவர் பலத்த தீக்காயங்களுடன் மறுத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசார் வெளியிட்ட தகவல் படி மாணவி தனது சீருடையில் மறைத்து வைத்து காகித சீட்டுகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று ஆசிரியர் சந்தேகத்தால் மாணவின் சீருடைகளை கழற்றி நிர்வாணமாக்கி உள்ளார்.

மாணவி, தனது வாக்குமூலத்தில், ஆசிரியர் தன்னை அவமானப்படுத்தியதாகவும், கடுமையாக எதிர்த்த போதிலும், சீருடையில் காப்பி சீட்டுகளை மறைக்கிறாய் என என்று சோதிக்க வகுப்பறையை ஒட்டியுள்ள அறையில் தனது ஆடைகளை கழற்றச் செய்ததாக காவல்துறை அதிகாரி கூறினார்.

அந்த ஆசிரியருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பள்ளியில் இருந்து வந்த சிறிது நேரத்திலேயே அவமானம் தாங்க முடியாமல் அந்த மாணவி தீக்குளித்துள்ளதாக மாணவியின் தாய் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More